Topic : Word of God

ஏனெனில் தேவ வாக்கியமானது உயிருள்ளதும், சக்தியுள்ளதும், இருபுறமும் கருக்குள்ள எந்த வாளிலும் அதிகக் கூரானதுமாயிருந்து, ஞானாத்துமாவையும், ஜீவாத்துமாவையும், மூட்டுகளையும், மூளையையுங்கூட ஊடுருவிப் பிரிக்கத்தக்கதுமாய், இருதயத்தின் நினைவுகளையும் கருத்துகளையும் வகையறுக்கத்தக்கதுமாய் இருக்கின்றது.

Hebrews 4:12

சர்வேசுரனுடைய மனுஷன் எவ்வித நற்கிரியையும் செய்வதற்குத் தகுந்த உத்தமனாவதற்குத் தேவ ஏவலால் அருளப்பட்ட வேதாகமங்கள் போதிப்பதற்கும், கண்டிப்பதற்கும், திருத்துவதற்கும், நீதிநெறியில் நடத்துவதற்கும் பிரயோஜனமுள்ளது. (2 இரா. 1:20.)


2 Timothy 3:16-17


நீங்கள் வாக்கியப்படி செய்கிறவர்களாயிருங்கள். ஆனால் உங்களையே மோசம்போக்கி (வாக்கியத்தைக்) கேட்கிறவர்களாய் மாத்திரம் இருக்க வேண்டாம். (மத். 7:21; உரோ. 2:13.)

James 1:22


புல் உலர்ந்துபோகிறது, புஷ்பம் உதிர்ந்துபோகிறது; ஆனால் நமதாண் டவரின் வார்த்தையோ நித்தியத்துக் கும் நிலைத்திருக்கும்.

Isaiah 40:8

அதற்கு அவர்: அப்படியானாலும், சர்வேசுரனுடைய வாக்கியத்தைக்கேட்டு, அதை அநுசரிக்கிறவர்கள் பாக்கியவான்களென்று திருவுளம் பற்றினார். * 28. தேவ வாக்கியத்தைக் கேட்டு அநுசரிக்கிறவர்கள் பாக்கியவான்களென்று சேசுநாதர் சுவாமி இங்கே சொல்லியிருக்கிறதினாலே, தேவ வாக்கியத்தை எல்லாரையும்விட உத்தமமாய்க் கேட்டு அநுசரித்துவந்த (லூக்.1:48) பரமநாயகி, எல்லாரிலும் பாக்கியவதி யென்று தன்னாலே விளங்குகிறது. அத்தோடு அவள் தேவதாயாகவும் இருப்பதால் இருவகையிலும் எல்லாரையும்விடப் பாக்கியவதியானாள் என்பதற்குச் சந்தேகமில்லை.

Luke 11:28


ஆகையால் என்னுடைய இவ் வார்த்தைகளைக் கேட்டு, இவைகளை அனுசரிக்கிற எவனும் கற்பாறையின் மேல் தன் வீட்டைக் கட்டி எழுப்பின விவேகமுள்ள மனுஷனுக்கு ஒப்பாவான். (லூக். 6:48; உரோ . 2:13; இயா . 1:22.)

Matthew 7:24

வானமும் பூமியும் ஒழிந்து போம். என் வார்த்தைகளோ ஒழிந்து போகாது. (மாற். 13:31.)

Matthew 24:35

ஆகையால் எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும், தத்தளிப் பில்லாமலும் நிறைவேற்றிவாருங்கள். (1 இரா. 4:9.)
இத்தன்மையாய்க் கோணலும், மாறுபாடுள்ளதுமான ஜனத்தின் நடுவில் நீங்கள் குற்றமற்றவர்களாகவும், சர்வே சுரனுடைய நேர்மையான பிள்ளைக ளாகவும், மாசற்றவர்களாகவும் இருப் பீர்கள். (மத். 5:16.)
ஏனெனில் நான் வீணாக ஓடினதும், வீணாகப் பிரயாசைப்பட்டதுமில்லையென்கிறதினாலே கிறீஸ்துவின் நாளில் எனக்கு மகிமையுண்டாயிருக்கும்படிக்கு நீங்கள் அவர்கள் நடுவிலே ஜீவ வாக்கியத்தைக் கையிலேந்திக்கொண்டு, உலகத்தில் சுடர்களைப் போல் பிரகாசிக்கிறீர்கள். (1 தெச. 2:19.)

Philippians 2:14-16a


அதற்கு அவர் மாறுத்தாரமாக: மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, சர்வேசுரனுடைய வாயினின்று புறப்படுகிற எந்த வாக்கியத்தினாலும் பிழைக்கிறானென்று எழுதப்பட்டிருக்கிறது என்றார். (உபாக. 8:3. லூக். 4:4.)

Matthew 4:4

ஆதியிலே வார்த்தையிருந்தார். அந்த வார்த்தை சர்வேசுரனிடத்திலிருந்தார். அந்த வார்த்தை சர்வேசுரனாகவும் இருந்தார். (பழ. 8:22-30; ஆதி. 1:1.) * 1. அர்ச். திரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரன் பிதாவின் வார்த்தை என்னப்படுகிறார். வார்த்தையானது மனதினின்று உற்பத்தியாகிறது போல சுதனும் தேவ பிதாவினின்று உற்பத்தியாகிறார். (மெனோக்கியுஸ்)

John 1:1

நான் ஆண்டவரைத் தேடி னேன்; அவர் என் மன்றாட்டைக் கேட்டருளினார்; என் சகல துன்பங் களிலும் நின்று என்னை விடுவித் தார்.

Psalms 33:4

வேதவாக்கியம் சொல்லுகிறபடியே என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுடைய வயிற்றினின்று ஜீவஜல நதிகள் பாய்ந்தோடும் என்றார். (உபாக. 18:15; இசை. 12:3; 44:3; அரு. 4:10, 14.) * 38. இஸ்பிரீத்துசாந்துவினிடமிருந்து வருகிற வரப்பிரசாதம் ஜீவிய ஜலம் எனப்படும். தேவ விசுவாசமுள்ளவன் தான் அடைந்திருக்கிற வரப்பிரசாத ஜலம் மற்றவர்களுடைய இருதயத்திலும் பாயும்படி முயற்சிசெய்வான்.

John 7:38

அவர் வானத்திலிருந்து (உதவி) அனுப்பி என்னை மீட்டார்; என்னை உபாதிக்கிறவர்கள் வெட்கிப்போகப் பண்ணினார்; சர்வேசுரன் தமது இரக் கத்தையும், உண்மையையும் அனுப்பி னார்; சிங்கக்குட்டிகளுடைய நடுவில் நின்று என் ஆத்துமத்தை விடுவித்தார்; நான் கலக்கங்கொண்டு நித்திரை செய் தேன்; ஏனெனில் மனுமக்களின் பற்கள் ஈட்டிகளும் அம்புகளுமாம்; அவர் கள் நாவு கருக்கான பட்டயமாம்.

Psalms 56:4

இப்போதே பிறந்த பிள்ளைகளைப் போல், கலப்பில்லாத ஞானப்பாலை உண்டு இரட்சணியத்துக்காக வளரும்படி அதன் மேல் விருப்பமாயிருங்கள். *** 2. ஞானப்பால் என்பது ஞான உபதேசமென்று அர்த்தமாம். பிறந்த குழந்தை வளர்ந்து பலப்படுவதற்குப் பால் ஆதாரமாவதுபோல, ஞானஸ்நானத்தினால் மறுபிறப்படைந்தவர்கள் இரட்சணியத்துக்காக வளர்ந்து பலப்படுவதற்கு ஞான உபதேசமாகிய ஞானப்பாலை ஆவலோடு தேடிச் சாப்பிடவேண்டியது.

1 Peter 2:2

ஏனென்றால், ஞானத்தை தரு கிறவர் ஆண்டவர் தாமே; அவரு டைய வாயினின்றே விவேகமுஞ் சாஸ்திரமும் புறப்படுகின்றது.

Proverbs 2:6

ஆகையால் சேசுநாதர் தம்மை விசுவசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் வாக்கியத்திலே நிலைத்திருந்தால், மெய்யாகவே என்னுடைய சீஷர்களா யிருப்பீர்கள்.
சத்தியத்தையும் அறிந்துகொள்ளு வீர்கள்; சத்தியம் உங்களைச் சுயாதீன ராக்கும் என்றார்.

John 8:31-32

ஆகையால் எவ்வித அசுசியை யும், துர்க்குணப் பெருக்கத்தையும் அகற்றி விட்டு, உங்கள் உள்ளத்தில் ஒட்டப்பட்டதும் உங்கள் ஆத்துமங்களை இரட்சிக்கக்கூடியதுமான வாக்கியத்தைச் சிரவணத்தோடு கைக்கொள்ளுங்கள். (1 இரா. 2:1; கொலோ. 3:8.)

James 1:21

(உள்ளபடி) அவர் உன்னைப் பசியினால் வருத்தினார். பின்பு நீயும் உன் பிதாக்களும் அறிந்திராத உண வாகிய மானூவை உனக்கு அளித் தார். அதினால் மனிதனானவன் அப்பத் தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயினின்று புறப்படுகிற ஒவ்வொரு வாக்கியத்தினாலும் பிழைப்பா னென்று உனக்குக் காண்பித்தருளி னார் (மத்.4:4; லூக்.4:4).

Deuteronomy 8:3


இவர் அவருடைய மகிமையின் பிரதாபமும் அவருடைய தற்பொருளின் சொரூபமாய் இருந்து, எல்லாவற்றையும் தம்முடைய வல்லப வார்த்தையால் தாங்கி, நம்மைப் பாவங்களினின்று சுத்திகரித்து, உன்னத ஸ்தலங்களில் அவருடைய மகத்துவ வலது பாரிசத்தில் உட்கார்ந்திருக்கிறார். (ஞானா. 7:26; மாற். 16:19.) * 3. மகிமையின் பிரதாபம்: - முகக்கண்ணாடியில் ஒருவனுடைய சாயல் முழுவதும் பிரதிபிம்பமாய்த் தோன்றுவதுபோல, பிதாவாகிய சர்வேசுரனுடைய சாயல் முழுவதும் சுதனிடத்தில் தோன்றுகிறது. அவருடைய தற்பொருளின் சொரூபம்: - சுதனாகிய சர்வேசுரன் தேவ பிதாவின் சுயசாயலும், அவருடைய தற்பொருளின் சொரூபமுமாயிருக்கிறார். முத்திரைக்கோலிலுள்ள சகல விஷயங்களும் முத்திரையில் பதிவதுபோல, பிதாவினிடத்திலுள்ள சுபாவமும் இலட்சணங்களும் சுதனிடத்தில் பதிந்திருக்கின்றன.

Hebrews 1:3

வார்த்தையானவர் மாம்சமாகி, இஷ்டப்பிரசாதமும் சத்தியமும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசமாயிருந்தார். அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவின் ஏக சுதனுக்குரிய மகி மைக்கு நிகராயிருந்தது. (மத். 1:16.) * 14. இவ்வாக்கியத்தைக் கொண்டு தேவ பிதாவின் வார்த்தையாகிய சுதனிடத்தில் தேவ சுபாவமும், மனுஷசுபாவமுமாகிய இரண்டு சுபாவமுண்டென்று ஒப்பிக்கப்படுகிறது. மாம்சமென்பது வேத வாக்கியங்களில் வழக்கமாய் ஆத்துமமுஞ் சரீரமுமுள்ள மனுஷ சுபாவத்தைக் குறிக்கிறது. ஆகையால் சுதனாகிய சர்வேசுரன் மாம்சமானாரென்கும்போது, அவர் ஒரே ஆளாய் மெய்யான சர்வேசுரனும் மெய்யான மனுஷனுமாய் இருக்கின்றார் என்றறிக.

John 1:14


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |